உள்ளக் கொலை


வெறுப்பு என்னும்
நெருப்பு மூட்டி
வேகமாய் அம்பினை
விட்டெறியும்
உன் கண்கள்! !
தோராயமாய்
தொண்ணூறு சதவிகிதம் இருக்கும்..
நானோ
முடிந்த வரை
என் மீது நீ கொண்ட
பத்து விகித பாசத்தை
எண்ணி மகிழ்கிறேன்! !
குருதி சொட்டச் சொட்ட
நின்ற போதும்
தோன்றவில்லை இந்த வலி..
பார்வையிலே சுட்டெரிக்கும்
உன் கோபம்
கனம் தவறாமல் தந்தது
மரண வலி! ! !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்