தேவதையின் பிரகாசம்


காலையில் கடலிடம் எழும் சூரியன்
உன் முகம்…
காற்றில் உள்ள இனிய தென்றல்
உன் சுவாசம்..
நீரில் படும் ஒளியின் பிரகாசம்
உன் கண்கள்..
கருமேகம் குழைத்துத் தீட்டியது
உன் கண்களின் மை..
வானவில்லின் வண்ணங்கள் கொண்டது
உன் சேலை..
மேகங்கள் புதைத்து நெஞ்சத்தைத் தைத்தது
உன் காலணி..
உன் சிரிப்பின் ஓசைகள் சேகரித்து கோர்த்தது
உன் கொலுசு..
வலம்புரிச் சங்கின் வளைவுகள் கொண்டது
உன் கழுத்து..
முத்துக்களை வாரி வீசும் உன் மூச்சுக் காற்றினை ஏந்த நினைப்பது
என் மனது..
உங்கள் அன்புத்தோழி,
தமிழ்இளவரசி.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்